Ticker

6/recent/ticker-posts

மத்திய அரசு அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கைகா அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், ஆராய்ச்சி உதவியாளர், ஓட்டுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




இதற்கு 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த காலியிடங்கள்: 137

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ஓட்டுநர் - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி:  டெக்னீசியன் - 06


தகுதி: சர்வேயர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ், ஃபிட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி, சம்பந்தப்பட்ட டெக்னீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: டெக்னீசியன் பயிற்சியாளர் - 34

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஆராய்ச்சி உதவியாளர் - 44

பணி: ஆராய்ச்சி உதவி பயிற்சியாளர் - 50

தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 06.01.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும்.  அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி

06.01.2020

IMPORTANT LINKS

Download Notification


Apply Link