தமிழக அரசு கூட்டுறவுத்துறையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேசன் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் வேலைவாய்ப்பு மற்றும் கட்டுநர் வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வமான நோட்டிபிகேசன் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Sales Person) மற்றும் கட்டுநர் (Packer) பதவிகளுக்கு நேரடி வேலை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் 15-07-2020 பிற்பகல் 5.45 மணி வரையும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்கள்
விற்பனையாளர் (Sales Person)
கட்டுநர் (Packer)
சம்பளம்
விற்பனையாளர்கள்
ஓராண்டுக்கு தொகுப்பூதியம் 5000/-
ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் 4300/- – 12000/-
கட்டுநர்கள்
ஓராண்டுக்கு தொகுப்பூதியம் 4250/-
ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் 3900/- – 11000/-
கல்வித்தகுதிகள்
1. விற்பனையாளர் பதவிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. கட்டுநர்கள் பதவிக்கு
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம் (Application Fee)
1.விற்பனையாளர் பதவிக்கு ரூ.150/-
2.கட்டுநர் பதவிக்கு ரூ.100/-
இந்த விண்ணப்பக்கட்டணத்தை District
Recruitment Bureau, Namakkal என்ற முகவரிக்கு DD எடுத்து அனுப்ப வேண்டும்.
DD-ன் பின்புறம்
விண்ணப்பப் படிவத்தின் எண், விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்
போன்றவற்றை எழுத வேண்டும்.
விண்ணப்பப் படிவம் கிடைக்கும் இடம்
விண்ணப்பப் படிவத்தை அனைத்து வேலைநாட்களிலும் நேரில் சென்று இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
இணைப்பதிவாளர் /
தலைவர்
மாவட்ட ஆள்
சேர்ப்பு நிலையம்,
அறை எண் : 2,
இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகம்,
நாமக்கல்
மாவட்டம்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி
15.07.2020
IMPORTANT LINKS