தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது மார்ச் மாதம் வெளியானது. ஊடரங்கு காரணமாக விண்ணப்பிக்கும் தேதி 15.06.2020 வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
மதுரை கூட்டுறவு வங்கி – 136
கோயம்புத்தூர் கூட்டுறவு வங்கி – 136
திருவண்ணாமலை கூட்டுறவு வங்கி – 127
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 48 வரை இருக்கலாம். பணிக்கேற்ப தளர்வும் வயது வரம்பும் மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 14500/- முதல் ரூ. 47500/- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
IMPORTANT LINKS