தமிழக அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 !
புதுக்கோட்டை மாவட்டத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு
திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள அமைப்பாளர், சமையலர்
மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட
பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு யூனியன் ஆபீசில் வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
அமைப்பாளர் – 265
சமையல் உதவியாளர் – 552
வயது வரம்பு:
பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் 43 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு
கல்வித்தகுதி:
அமைப்பாளர் பணிக்கு கல்வித் தகுதி பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி/ தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சமையல் உதவியாளர் பணிக்கு கல்வித் தகுதி பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்கள்.
பழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு BDO ஆபீசில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24.09.020 முதல் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி ஆணையர்களுக்கு 30.09.2020ம் தேதி முடிய அலுவலக வேலை நேரத்திற்குள் கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பப்படவேண்டும்.
இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
OFFICIAL WEBSITE
FOR MORE JOBS CLICK HERE