Ticker

6/recent/ticker-posts

5-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

   தமிழ்நாடு அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்வது கட்டாயம் ஆகும்.

        38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு


பதவியின் பெயர்

கிராம உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை

6 கிராம ஊராட்சிகளில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


காலியிடங்கள் மற்றும் இனச்சுழற்சி

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் காலியாக உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு விபரங்கள் பின்வருமாறு:

1. பன்றிமலை – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சீர்மரபினர்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சீர்மரபினர் வகுப்பினரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

2.கோடல்வாவி– பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) வகுப்பினரைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசில் கிளார்க் வேலைவாய்ப்பு


3.பலக்கனூத்து – பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்களாக) வகுப்பினரைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

4.தோணிமலை- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சீர்மரபினர்வகுப்பினரைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

5.சிரங்காடு- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்களாக) வகுப்பினரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

6.அலக்குவார்பட்டி – பழங்குடியினர் (பொது) வகுப்பினரைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம்


கல்வித்தகுதி

கிராம உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வித்தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் Post Office-ல் வேலைவாய்ப்பு


வயது வரம்பு

வயது வரம்பு 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் அனைத்து பிரிவினருக்கும் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்சம்

Gen - 30

BC/MBC - 32

SC/ST - 35

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.


முக்கிய நிபந்தனைகள்

காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும்பொழுது, பணியிடம் காலியாக உள்ள கிராமம் அல்லது 2 கிலோ மீட்டர் சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவில் தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில், காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.


விண்ணப்பிக்கும் முறை


தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 20.11.2020-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீசில் வேலைவாய்ப்பு


செய்தி வெளியீடு

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்

திண்டுக்கல் மாவட்டம்


IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION



FOR MORE JOBS CLICK HERE