Ticker

6/recent/ticker-posts

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு

  TNRD திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2020


தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தற்போது அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவாரூர் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் மேற்பார்வையாளர் (Overseer) பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.



பதவியின் பெயர்:

பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்

இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு


காலிப்பணியிடங்கள் :

14 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனச்சுழற்சி வாரியான காலியிடங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.


வயது வரம்பு:

01.10.2020ம் தேதி கணக்கீட்டின்படி 18 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.


கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசில் ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு


சம்பளம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :


கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிட வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு),

அறை எண். 60,

இரண்டாம் தளம்,

மாவட்ட ஆட்சியரகம்,

திருவாரூர்.

தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி

03.12.2020


IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


FOR MORE JOBS CLICK HERE