தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
பருவ கால பட்டியல் எழுத்தர்
பருவ கால காவலர்
காலிப்பணியிடங்கள்:
பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவ கால காவலர் பதவிக்கு பல்வேறு
பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி
அடைந்தவராக இருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது
OC -
30
BC/MBC - 32
SC/ST - 35
மாத ஊதியம்:
பருவ கால பட்டியல்
எழுத்தர் – ரூ.2410 + DA
பருவ கால காவலர் – ரூ.2359 + DA
கல்வித்தகுதி:
பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க
வேண்டும். (B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths and Bio
Chemistry)
பருவ கால காவலர் – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் ஆனது 29.12.2020 முதல் 30.12.2020 வரை நடைபெற உள்ளது.
பருவ கால பட்டியல் எழுத்தர் -
29.12.2020
பருவ கால காவலர் -
30.12.2020
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான சுய
சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் பின்வரும் முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில்
கலந்து கொள்ளலாம்.
முகவரி:
மண்டல மேலாளர் அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
சிவில் சப்ளைஸ்
குடோன் ரோடு,
பலவன்சாத்துக்குப்பம்,
வேலூர் –
632001.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS