TNPSC முக்கிய அறிவிப்பு
தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விருப்பும்
விண்ணப்பதாரர்கள் அனைவரும் அவர்களது ஒருமுறைப்பதிவு / நிரந்தரப்பதிவில்(one
time registration) கட்டாயம் அவர்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று
தேர்வாணையத்தால் முன்னரே அறிவிக்கப்பட்டு இருத்தது. அதன் அடிப்படையில்
விண்ணப்பதாரர்கள் விரைவில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆதார் எண் கட்டாயம்
இனிவரும் காலங்களில் தேர்வர்கள் தங்கள் நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்யும்
முன் கண்டிப்பாக தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் பதிவுசெய்த பின்புதான்
நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் செய்தி வெளியீட்டு
உள்ளது.
விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஒருமுறைப்பதிவு /
நிரந்தரப்பதிவு வைத்து கொள்ள அனுமதியில்லை. ஒருமுறைப்பதிவு / நிரந்தரப்பதிவு
ஆதார் எண்ணை தவறுதலாக பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மாற்றம்\செய்ய ஒரு
வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது .
குரூப் 1 தேர்வு நுழைவுச்சீட்டு
03.01.2021 அன்று நடைபெறும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு மற்றும் 09.01.2021
& 10.01.2021 அன்று நடைபெற உள்ள உதவி இயக்குனர் (தொழில் மற்றும் வணிகம்)
ஆகிய தேர்வுக்கு நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதனை ஆதார் எண்ணை இணைத்த பின்னால் தான் பதிவிறக்கம் செய்ய இயலும் என செய்தி
குறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.
IMPORTANT LINKS:
DOWNLOAD TNPSC PRESS RELEASE
CLICK HERE FOR MORE UPDATES