மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள்
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான
தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைவாய்ப்பானது
தற்போது 4 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் :
Counsellor (ஆற்றுப்படுத்துநர்)
காலியிடங்கள் :
சிவகங்கை
ஆண் - 1, பெண் - 1
வேலூர்
ஆண் - 2, பெண் - 1
புதுக்கோட்டை
ஆண் - 2, பெண் - 1
தஞ்சாவூர்
ஆண் - 3, பெண் - 3
கல்வித்தகுதி :
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் உளவியல் மற்றும்
ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.01.2021 அன்றுள்ள படி அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க
வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.1000/- என்ற அடிப்படையில்
தினசரி சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
இப்பதவிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வுக்குழு மூலம் நேர்முகத்தேர்வு
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை
பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி
வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
சிவகங்கை -
05.02.2021
வேலூர் - 05.02.2021
தஞ்சாவூர் -
12.02.2021
புதுக்கோட்டை - 15.02.2021
IMPORTANT LINKS
NOTIFICATION & APPLICATION - SIVAGANGAI
NOTIFICATION & APPLICATION - VELLORE
NOTIFICATION & APPLICATION - THANJAVUR
NOTIFICATION & APPLICATION - PUDUKKOTTAI