Ticker

6/recent/ticker-posts

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு

    8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசில் வேலைவாய்ப்பு


தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (TNRD) கீழ் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்டம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிக் கொண்டு உள்ளது.

தற்போது சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


 
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :


ஊர்தி ஓட்டுநர் (Jeep Driver) - 11 காலியிடங்கள்



கல்வித்தகுதி :

Jeep Driver பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.



அதிகபட்ச வயது வரம்பு :

OC - 30

BC/MBC - 32

SC/ST -40


சம்பளம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.


பணியின் தன்மை :


நிரந்தரப் பணியிடம்



தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சிவகங்கை.



விண்ணப்பிக்க கடைசி தேதி:


25.01.2021



IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION



DOWNLOAD APPLICATION




CLICK HERE FOR MORE JOBS