8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் நிரந்தர வேலைவாய்ப்பு
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (TNRD) கீழ் பல்வேறு
மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்டம் சார்பில்
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிக் கொண்டு உள்ளது.
தற்போது விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Office
Assistant – 17 பணியிடங்கள்
Night Watchman – 02 பணியிடங்கள்
Jeep Driver – 02 பணியிடங்கள்
மொத்தமாக 21
காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
Office Assistant – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Night Watchman – தமிழில் எழுதவும்,
படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது ஆகும்.
Jeep Driver –
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க
வேண்டும் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க் வேண்டும்.
வயது வரம்பு :
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு
மிகாதவராக இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினர் அதிகபட்சம் 35
வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/-
முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் மற்றும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு
அனுப்பி வைக்க வேண்டும்.
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
_______________
விருதுநகர்
மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
25.01.2021
IMPORTANT LINKS
OFFICE ASSISTANT NOTIFICATION & APPLICATION
NIGHT WATCHMAN NOTIFICATION & APPLICATION
JEEP DRIVER NOTIFICATION & APPLICATION
CLICK HERE FOR MORE JOBS