10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு
வேலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Data Entry
Operator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் விருப்பமானவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
வேலூர் மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் உதவியாளர் மற்றும் கணிணி
இயக்குபவர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம்
பெற்ற நிறுவனத்தில் கணிணி கல்வியில் பட்டயப்பயிற்சி (Diploma in Computer
Application) மற்றும் ஆங்கிலம்/தமிழ் முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க
வேண்டும்.
மாதச்சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு
ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.9,000/- வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம்
செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து புகைப்படத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி
வைக்க வேண்டும்.
முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
சுற்றுலா மாளிகை எதிரில்,
அண்ணா சாலை,
வேலூர் - 632 001
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி :
05.02.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS