Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் ரயில்வேயில் மாபெரும் வேலைவாய்ப்பு - 3378 காலியிடங்கள்

 தமிழகத்தில் ரயில்வேயில் மாபெரும் வேலைவாய்ப்பு - 

3378 காலியிடங்கள்

 

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் – 936

மத்திய தொழிற் கூடங்கள், பொன்மலை – 756

சிக்னல் & தொலைத்தொடர்பு தொழிற் கூடம், போத்தனுர் – 1686


வயது வரம்பு :

24.06.2021 அன்றைய தேதிப்படி

குறைந்தபட்சமாக 15 வயதிற்கு குறையாமலும் அதிகபட்சமாக 24 வயதிற்கு மிகாமலும் இடைப்பட்ட வயதை உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

மத்திய அரசிந் விதிமுறைகளின் படி SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.



கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



சம்பளம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு Apprentice விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

01.06.2021 முதல் 30.06.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS