தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் கீழ் இயங்கும் இராமநாதபுரம் அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.
இந்த
பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளது. எனவே,
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
மருத்துவ அலுவலர்கள் – 50
செவிலியர்கள் – 60
மொத்தம் 110 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
மருத்துவர்கள் :
மருத்துவ கவுன்சிலில் அங்கீகரிக்கப்பட்ட கல்லுரியில் MBBS பட்டம் பெற்றிருக்க
வேண்டும். மேலும் TNMC பதிவு செய்திருக்க வேண்டும்.
செவிலியர்கள் :
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் DGNM பட்டம் பெற்றிருக்க
வேண்டும். மேலும் செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் .
சம்பளம் :
Medical Officer – ரூ.40,000/-
Staff Nurse – ரூ.14,000/-
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல்
ஆனது 22.05.2021 முதல் 31.05.2021 வரை நடைபெற உள்ளது.
முக்கிய குறிப்பு :
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம்
செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க
வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய
விண்ணப்படிவத்துடன் அனைத்து சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நேர்காணல் நடைபெறும் இடம் :
முதல்வர்,
இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி
மருத்துவமனை,
இராமநாதபுரம்.
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS