தமிழ்நாட்டில் மாவட்ட நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு
காலியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
அலுவலக உதவியாளர் - 8
சுகாதாரப் பணியாளர் - 12
காவலர் - 31
துப்புரவுப் பணியாளர் - 14
மசால்ஜி - 16
மொத்தம் 81 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் பின்வரும்
ஆன்லைன் இணைப்பின் மூலம் உரிய தகவல்களை அளித்து ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
06.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS