தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகத்தில்
காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பதவிகள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும்
உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
கிராம உதவியாளர்
காலிப்பணியிடங்கள் :
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்துள்ள 19 கிராம
ஊராட்சிகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /
சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள்,
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 35 ஆண்டுகள்.
வேலை வாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கபட்டிருக்க
வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அந்தந்த வட்டத்தைச் சேர்ந்தவர்களாக
இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இனச்சுழற்சி :
ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இனத்தைச் சார்ந்த
விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது,
சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் கீழ்வேளூர் வட்டாட்சியர்
அலுவலகத்திற்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
09.09.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS