தமிழ்நாட்டில் மாவட்ட நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள
பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான
தகுதிகள் மற்றும் முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில்
தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
சுருக்கெழுத்து தட்டச்சர் ( Steno Typist ) - III
மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அரசு தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வு இரண்டிலும்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
BC/MBC - 34
SC/ST - 37
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.20,600/- முதல் அதிகபட்சம் ரூ.65,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான எழுத்துத் தேர்வின் மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை
இணைத்து பின்வரும் முகவரிக்கு பதிவு தபாலில் மட்டுமே அனுப்பி வைக்க
வேண்டும்.
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
புதுக்கோட்டை
மாவட்டம் - 622 001
விண்ணப்பிக்க கடைசி தேதி :
18.10.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS