தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
தேவையான தகவல்கள் அனைத்தும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில்
தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Post Graduate Assistants
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
இயற்பியல்
வேதியியல்
உயிரியல்
விலங்கியல்
தாவரவியல்
பொருளியல்
வரலாறு
புவியியல்
வணிகவியல்
ஆகிய பாடங்களில் மொத்தமாக 2774 காலியிடங்கள் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பள்ளிகளுக்கு ஏற்றவாறு வேறுபடும்.
வயது வரம்பு:
General – 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
BC,MBC,DNC,BCM, SC, SCA, ST, Pwd – 45 வயது வரை உள்ளவர்கள்
விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதி:
Post Graduate Assistant :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன்
(அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான
கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பி.எட். முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பணியின் தன்மை :
மேற்கண்ட பணியிடங்கள்
அனைத்தும் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக 5 மாதங்களுக்கோ அல்லது அரசால்
புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் வரையோ இருக்கும்.
மாதச் சம்பளம்:
ரூ.10000/- தொகுப்பூதியமாக
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின்
விண்ணப்பப் படிவம் மற்றும் அனைத்து வகையான சான்றிதழ்களின் அசல் மற்றும்
நகல்களுடன் தங்களுக்கு அருகாமையில் உள்ள மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை
அணுகி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.11.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS