Ticker

6/recent/ticker-posts

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வங்கியில் வேலைவாய்ப்பு

 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வங்கியில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.



பணியின் பெயர் :

பகுதி நேர துப்புரவு பணியாளர்கள்


காலியிடங்கள் :


மதுரை – 9

கன்னியாகுமரி – 3

புதுக்கோட்டை – 3

ராமநாதபுரம் – 1

சிவகங்கை – 3

தென்காசி – 1

தேனி – 1

தூத்துக்குடி – 1

திருநெல்வேலி- 6

விருதுநகர் – 2

மொத்தம் 41 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


வயது வரம்பு :

1.07.2021ன் படி குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 24 என்றும் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்,

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.


கல்வித்தகுதி :

இந்த பணிக்கு பத்தாம் வகுப்பில் தோல்வியானவர்களும், படிப்பறிவு இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

அதிகமான கல்வித்தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைகளில் நேரடியாக சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


Chief Manager (HRD),

Punjab National Bank,

Circle Office,

Madurai.


விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.12.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS