தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு
பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பதவிகள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும்
உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
கிராம உதவியாளர்
காலிப்பணியிடங்கள்:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ள 14 கிராம ஊராட்சிகளில் கிராம
உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள 8 கிராம ஊராட்சிகளில் கிராம உதவியாளர்
பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டத்தில் அமைந்துள்ள 2 கிராம ஊராட்சிகளில் கிராம
உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு:
வயது 01.01.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆண்டுகள்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /
சீர்மரபினருக்கு 34 ஆண்டுகள்,
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆண்டுகள்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க
வேண்டும்.
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
11,100/- முதல் 35,100/- மற்றும் இதர படிகள்
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக
தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்
மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தைப் பூர்த்தி செய்து கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி
குறித்த ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
பொன்னேரி /
கும்மிடிப்பூண்டி / பூவிருந்தவல்லி
விண்ணப்பிக்க கடைசி தேதி:
20.01.2022
IMPORTANT LINKS
CLICK HERE FOR MORE JOBS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
DOWNLOAD NOTIFICATION 3