தமிழ்நாடு அரசு VAO ஆபீசில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக
அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
கிராம உதவியாளர்
காலிப்பணியிடங்கள்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் அமைந்துள்ள 5 கிராமங்களில் கிராம உதவியாளர்
பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1) 12 புதூர்
2) தொப்பம்பட்டி
3) தும்பலப்பட்டி
4) அய்யம்பாளையம்
5) தாளையூத்து
வயது வரம்பு:
வயது 01.07.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆண்டுகள்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /
சீர்மரபினருக்கு 37 ஆண்டுகள்,
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆண்டுகள்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
11,100/- முதல் 35,100/- மற்றும் இதர படிகள்
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் கீழ்க்கண்ட நடைமுறைகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள்.
அ) பணியிடம் காலியாக உள்ள கிராமம்,
ஆ) 2 கி.மீட்டர் சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும்,
இ) தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள குறு வட்டத்தைச் சேர்ந்த குறு வட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தைப் பூர்த்தி செய்து கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி
குறித்த ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
பழனி.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
07.04.2022
IMPORTANT LINKS
CLICK HERE FOR MORE JOBS