10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வங்கியில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட
பதவிகளுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் :
Peon
காலியிடங்கள் :
கடலூர் – 3
கிருஷ்ணகிரி – 1
மயிலாடுதுறை – 1
நாகப்பட்டினம் -1
நாமக்கல் – 1
சேலம் – 1
திருச்சி – 6
மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அந்தந்த மாவட்டத்தைச்
சேர்ந்த நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு :
01.01.2022-ன் படி குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 24 என்றும்
இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி OBC பிரிவினருக்கு 3
ஆண்டுகளும்,
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுத் தளர்வு
அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
இந்த
பணிக்கு அதிகபட்சம் 12- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை
விண்ணப்பிக்கலாம்.
அதிகமான கல்வித்தகுதி உடைய விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான
நபர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைகளில் நேரடியாக
சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும்
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முதன்மை மேலாளர்,
மனித வள மேம்பாட்டு துறை,
வட்டார அலுவலகம்,
“PNB ஹவுஸ்”,
திருச்சி தஞ்சாவூர் சாலை,
கைலாசபுரம், திருச்சி – 620 014.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
09.04.2022
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS