தமிழ்நாடு அரசு VAO ஆபீசில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக
அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
கிராம உதவியாளர்
காலிப்பணியிடங்கள்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள 9 கிராமங்களில் கிராம உதவியாளர்
பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1) மட்டப்பாறை – பொது பிரிவு – பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்
2) சித்தர்கள்நத்தம் – BC (பிற்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக)
(பொது) – முன்னுரிமையுள்ளவர்.
3) ஜம்புதுரைக்கோட்டை – பொது பிரிவு – (பொது) முன்னுரிமையுள்ளவர்.
4) விருவீடு – SC – (பொது) – முன்னுரிமையற்றவர்
5) மல்லணம்பட்டி – MBC/DNC – பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்
6) மாலையகவுண்டன்பட்டி – BC (பிற்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) –
(பொது) – முன்னுரிமையற்றவர்.
7) குன்னுவாரன்கோட்டை – பொது பிரிவு – (பொது) – மாற்றுத்திறனாளி
8) கணவாய்பட்டி – SC – (பெண்கள் மட்டும்) – முன்னுரிமையற்றவர்
9) சின்னமநாயக்கன்கோட்டை – பொது பிரிவு – (பொது) – முன்னுரிமையற்றவர்
வயது வரம்பு:
வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆண்டுகள்,
பிற வகுப்பினருக்கு 37 ஆண்டுகள்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க
வேண்டும்.
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
11,100/- முதல் 35,100/- மற்றும் இதர படிகள்
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வின்
மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தைப் பூர்த்தி செய்து கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி
குறித்த ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
நிலக்கோட்டை.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
05.04.2022
IMPORTANT LINKS
CLICK HERE FOR MORE JOBS